Posts

Showing posts from October, 2018

குஜராத் சிலை திறப்பு

இன்று குஜராத் மாநிலத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் அவர்களின் மிக பிரமாண்டமான சிலை நர்மதை ஆற்றின் குறுக்கே கடந்த 33 மாதங்களாக  கட்டப்பட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்பட்டது.இச் சிலை உலகிலேயே மிக உயரமான பிரமாண்ட சிலையாக கருதப்படுகிறது.சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகி ஆவார்.சுதந்திர இந்தியாவை ஒரங்கினைத்த பெருமை இவரையே சாரும்.இவரை பெருமை படுத்தும் விதமாக இச்சிலை நிறுவப்பட்டது.சர்தார் வல்லபாய் படேல் ஒரு வக்கீல் ஆவார்

இயற்கணிதம்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கணிதம் பாடத்தில் இரு இயற்கணித கோவைகளின் கூட்டல் நிரல் முறை கூட்டல் மற்றும் மாற்று முறைகளில் எவ்வாறு கூட்டுவது என்று மாணவர்களுக்கு நடத்தினேன்.மேலும் இரு இயற்கணிதக்கோவைகளின் கழித்தல் நிரல்முறை மற்றும் மாற்று முறைகளிலும் நடத்தினைன்.பல்லுறுப்புக் கோவைகளின் திட்ட வடிவம் மற்றும் பல்லுறுப்புக் கோவைகளின் மதிப்பு ஆகியவற்றை மாணவர்களுக்கு நடத்தினேன்.

இயற்கணிதம்

இன்று நான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கணிதம் பாடத்தில் ஓருறுப்பு கோவை ,ஈருறுப்புக்கோவை , மூவுறுப்புக்கோவைகள் குறித்தும் பல்லுறுப்பக்கோவையின் திட்ட வடிவம் குறித்தும் பல்லுறுப்புக் கோவைகளின் கெழுவைக் காணுதல் குறித்து நான் இன்று மாணவர்களுக்கு நடத்தினேன்

படித்தல்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடத்தில் செய்முறை வடிவியல் பாடத்தில் சதுரத்தை வரைவது குறித்து பாடம் நடத்தினேன்.ஒரே ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது குத்துக்கோட்டு மையம் வரைந்து சதுரம் வரைவது குறித்து நடத்தினேன்.மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் படித்தலுக்கான பயிற்சியை நான் கொடுத்தேன்.

டெங்கு

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் எவ்வாறு படிப்பது என பயிற்சி அளித்தேன்.மேலும் இன்று எங்கள் பள்ளியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு டெங்குவிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாப்பது என விழிப்புணர்வு செய்தனர்

செவ்வகம்

இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை வடிவியல் பாடத்தில் செவ்வகம் இரு பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது எவ்வாறு வரைவது எனவும் மற்றும் மூலைவிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது எவ்வாறு வரைவது என்றும் என்னுடைய வழிகாட்டி ஆசிரியர் மாணவர்களுக்கு நடத்தினார்.

செவ்வகம்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை வடிவியல் பாடத்தில் செவ்வகம் எவ்வாறு வரைவது என என்னுடைய வழிகாட்டி ஆசிரியர் நடத்தினார்.வட்டக்கவராயம் வைத்து செவ்வகம் எவ்வாறு வரைவது என பாடடம் நடத்தினார்.செவ்வகத்தின் மூலைவிட்டங்கள் சமம் எதிரெதிர் பக்கங்கள் சமம் ஆகியவற்றை எங்களின் ஆசிரியர் நடத்தினார்

சாய்சதுரம்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை வடிவியல் பாடத்தில் சாய்சதுரத்தை எவ்வாறு வரைவது என மாணவர்களுக்கு என்னுடைய வழிகாட்டி ஆசிரியர் பாடம் நடத்தினார். அதில் இரு மூலைவிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது எவ்வாறு வரைவது எனவும் மற்றும் ஒரு கோணம் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது எவ்வாறு வரைவது என நடத்தினார்.

இயற்கணிதம்

இன்று எங்கள் பள்ளியில் மாணவர்கள் நாளை நடக்க இருக்கும் பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தயார் ஆகிக் கொண்டிருந்தனர்.மேலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான் இயற்கணிதத்தில் உள்ள அடிப்படைக்கருத்துகள் சிலவற்றை நான் நடத்தினேன்.

கை கழுவும் தினம்

இன்று எங்கள் பள்ளியில் உலக கை கழுவும் தினம் வெகு விமர்சையாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்பட்டது .மேலும் டாக்டர் A.P.J.அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.கை கழுவும் தினத்தை முன்னிட்டு நான் பயிற்சி மேற்கொள்ள சென்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் எவ்வாறு சுத்தமாக கை கழுவுவது என கை கழுவிக்காட்டினார்.நாங்ககளும் கை கழுவினோம்.

கார்ட்டீசியன்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரைபடங்கள் பாடத்தில் கார்ட்டீசியன் தளத்தில் புள்ளிகளை எவ்வாறு குறிப்பது என்பதையும் கார்ட்டீசியன் தளத்தில் உருவங்களை குறித்து அதன் பரப்பளவுகளை காணும் முறைகளயும் எவ்வாறு காண்பது என்று நடத்தினேன்.மேலும் ஆங்கிலம் பாடத்தில் மாணவர்களுக்கு படித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள கற்றுத்தந்தேன்.

வரைபடங்கள்

இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் வழிகாட்டி ஆசிரியர் வரைபடங்கள் நடத்தினார்.கார்ட்டீசியன் என்னும் வார்த்தை அந்த கார்ட்டீசியன் தளத்தை கண்டுபிடித்த ரெனே டெஸ்கார்ட்ஸ் என்பவரின்  பெயரில் இருந்து கார்ட்ஸ் என்னும் வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டது என நடத்தினார்.மேலும் அச்சு தொலைவு ஆகியவற்றை நடத்தினார்

பூனை

ஒரு ஊரில் ஒரு பூனையும் எலியும் நண்பர்களாக இருந்தனர்.தினமும் எலியும்,குட்டி எலியும் பூனையுடன் ஒன்றாக விளையாடினார்கள். ஒரு நாள் திடீரென பூனையை காணவில்லை. எலியும் குட்டி எலியும் பூனையை தேடி சென்றன.அப்போது ஒரு வேடனின் வலையில் பூனை சிக்கியிருந்தது.அங்கே எலி அருகில் சென்று விசாரித்தபோது பூனை காலையில் இருந்து பசியுடன் வலையில் சிக்கி இருப்பதாக கூறியது.உடனே எலியானது மிகவும் பொருமையாக கடித்துக்கொண்டிருந்து.அப்போதுவேடன் அங்கு வந்தான் அதை பார்த்தவுடன் எலி விரைவாக வலையை கடித்தது.அனைவரும் தப்பிச்சென்றனர்.வீடு திரும்பியவுடன் குட்டி எலி ஏன் எலி முதலில் பொருமையாகவும் பின்பு விரைவாகவும் கடித்ததற்கான காரணத்தை கேட்டது.அப்போது எலி பூனையும் எலியும் பகைவர்கள் ஆவார்..இதனால் பூனை பசியடன் இருந்ததால் தங்களை உணவாக்கிவிடும் என்பதற்காகவே அப்படி செய்ததாக கூறியது.இதில் இருந்து நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்துகொண்டேன்.