Posts

Showing posts from September, 2018

மலை

Huge herr என்பவர் புகழ் பெற்ற மலை ஏறுபவர் ஆவார்.இவர் 8 வயதில் டெம்பிள் மலையை ஏறியவர்.இவர் 17 வது வயதில் புகழ் பெற்ற உலக முதல் மலைஏறும் வீரராக திகழ்ந்தார்.இவர் ஒரு முறை மலை ஏறும் போது கீழே விழுந்து -29°celcius இல் மூன்று நாள் இருந்ததில் தனது கால்களை இழந்தார்.பின்பு தானே ஆராய்ச்சி செய்து செயற்கை கால்கள் பொருத்தி மீண்டும் மலைஏறினார்.விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்

எவரஸ்ட்

அருணிமா சின்கா என்பவர் 2011 ஆம் ஆண்டு இரயிலில் பயனம் செய்யும்போது கொள்ளையர்களை எதிர்த்து போராடும் போது தனது காலை இழந்தார்.இவருக்கு 2013 ஆம் ஆண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது .பின்னர் இவர் எவரஸ்ட் சிகரத்தை ஏறி முடித்தார்.இவருக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.இவர் தனது விடாமுயற்சியால் தனது கால்களை இழந்த பின்னும் சாதனை படைத்தார்.இது போலவே விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என நான் இன்று தெரிந்து கொண்டேன்

உடல்நலக்கல்வி

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடல்நலக்கல்வி தேர்வு நடந்தது.மாணவர்கள் நன்றாக தேர்வு எழுதினர்.விளையாட்டுகள் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.மாணவர்கள் காலை முழுவதும்  நன்றாக படித்து மதியம் தேர்வு எழுதின ர்

அறிவியல்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் தேர்வு. அதற்கு காலை முழுவதும் மாணவர்கள் படித்தனர்.மதியம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.காலை மாணவர்களை பார்த்துக் கொண்டது மிகவும் வித்யாசமான அனுபவமாக இருந்தது.

கணிதம்

இன்று மதியம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் தேர்வு நடந்தது .அதற்கு காலை திருப்புதல் செய்தேன்.முதல் பருவத்தேர்வுக்கு மாணவர்களுக்கு சந்தேகம் இருந்ததை நான் மீண்டும் நடத்தினேன்.அளவைகள் , வடிவியல் பாடத்தில் உள்ள கணக்குகளை மீண்டும் நான் நடத்தினேன்.மீதி அலகுகளை என் வழிகாட்டி ஆசிரியர் நடத்தினார்.மேலும் மாணவர்கள் நன்றாக தேர்வு எழுதினார்கள்

முதல் பருவம்

இன்று முதல் 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு துவங்கியது.ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை தமிழ் திருப்புதல் நடந்தது அப்போது மாணவர்களுக்கு பாடத்தை திருப்புதல் செய்ய உதவினேன்

செய்முறை வடிவியல்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை வடிவியல் பாடத்தில் சரிவகம் வரைதலை தேர்வு வைத்தேன். மேலும் மாணவர்களுக்கு அளவைகள் பாடத்தில் இருக்கும் சந்தேகங்களை மீண்டும் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்தேன்.